அமெரிக்கா வீசிய 'குண்டுகளின் தாய்' ஆப்கனில் விழுங்கிய தீவிரவாதிகளின் எண்ணிக்கை தெரியுமா?
ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, இத்தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், இந்த தாக்குதலை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பதுங்கும் இடத்தை குறிவைத்து நேற்றுமுன்தினம் மாலை அமெரிக்கா அதிக சக்திவாய்ந்த குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
அனைத்து குண்டுகளின் தாய் என கருதப்படும் இந்த வெடிகுண்டு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்ப் பாராட்டு
அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியிருந்தார். அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்க செனட் உறுப்பினர்களும் டிரம்பின் நடவடிக்கையை பாராட்டினர். ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு இது ஒரு தெளிவான தகவலை அனுப்பியிருக்கும் என்று செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் விவரம்
இந்த தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது. ஆப்கனின், அச்சின் மாவட்ட கவர்னர் இஸ்மாயில் ஷின்வாரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இத்தாக்குதலில் 92 தீவிரவாதிகள் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.

சுமார் 100 தீவிரவாதிகள்
இந்த தாக்குதலில் ராணுவம், காவல்துறையை சேர்ந்தவர்கள் இறக்கவில்லை என்றும் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக சுமார் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதிருப்தி குரல்கள்
ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, இத்தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், இந்த தாக்குதலை எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஆப்கனில் குட்டி பகுதியை மட்டுமே தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்ததாகவும், அதற்காக அமெரிக்கா தனது குண்டை போட்டு சோதிக்கும் இடமாக ஆப்கனை மாற்றியதை ஏற்க முடியாது என்று அந்த அதிகாரிகள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications