பனிமலையில் தவறி விழுந்து ஜப்பான் மலையேற்ற வீராங்கனை பலி!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் உள்ள ‘குரோடெக்' பனிமலையில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராத விதமாக மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஜப்பானின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி (43). உலகில் உள்ள உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

கடந்த 2007-ம் ஆண்டு இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். சிறந்த மலையேற்ற வீரர்களுக்கு பிரான்ஸ் பத்திரிகை மோன்டக்னஸ் சார்பில் வழங்கப்படும் ‘பயோலெட் டி.ஓ.ஆர்.' விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் தனி குச்சிக்கு உண்டு.

Mountain climber Kei Taniguchi dies at 43

இந்நிலையில், தனி குச்சி தன் சக மலையேற்ற வீரர்கள் 3 பேருடன், ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணம் டைசெட் சுஜனில் உள்ள குரோடெக் பனிமலையில் ஏறினார். இந்த மலையானது 6510 அடி (1924 மீட்டர்) உயரமுள்ளது.

மலையில் இருந்து தன் நண்பர்களுடன் இறங்கிய போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார் தனி குச்சி. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, கீ தனிக் குச்சியின் நண்பரும், மலையேறும் வீரருமான ஹிரோஷி ஹகிவாரா தெரிவித்துள்ளார்.

தனி குச்சியின் இந்த திடீர் மரணம் ஜப்பான் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+