முகம்மது அலியின் மூளையை ஆராய்ச்சிக்காக அளிப்பார்களா குடும்பத்தினர்?
லூயிஸ்வில்லி: முகம்மது அலியின் மூளையை, பர்கின்சன் நோய் ஆராய்ச்சிக்காக தானமாக அளிப்பது குறித்து அவரது குடும்பத்தினர் முடிவெடுக்கவில்லை என்றும் அதுகுறித்துப் பரிசீலிக்கவில்லை என்றும் அவரது டாக்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பரிசீலிக்கவே இல்லை என்று டாக்டர் அபே லிபர்மென் கூறியுள்ளார். மேலும் குத்துச் சண்டை காரணாகத்தான் முகம்மது அலிக்கு பர்கின்சன் நோய் வந்ததாக தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இதை நூறு சதவீதம் ஏற்க முடியாது. 1984ம் ஆண்டு நான் முதலில் முகம்மது அலிக்கு பர்கின்சன் தாக்கியிருப்பதை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன்.
இருப்பினும் அதற்கு முன்பே அலிக்கே அந்த பாதிப்பு இருந்திருக்கலாம். அதாவது அவர் 1980ம் ஆண்டு ராலி ஹோம்ஸுடன் மோதுவதற்கு முன்பே அவருக்கு பாதிப்பு இருந்திருக்கலாம். எனவே குத்துச் சண்டையால்தான் அவர் பாதிக்கப்பட்டார் என்று கூற முடியாது.
மேலும் குத்துச் சண்டையை முகம்மது அலி மிகவும் நேசித்தார். குத்துச்சண்டையை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. அதையே தனது சுவாசமாக நினைத்தார். அவரும் கூட பர்கின்சன் வர பாக்ஸிங்தான் காரணம் என்று அவர் நம்பியதில்லை. இது கடவுளின் விருப்பம் என்றுதான் எப்போதும் கூறுவார் முகம்மது அலி என்றார் டாக்டர் லிபர்மன்.












Click it and Unblock the Notifications