போனை எடுக்காத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்- சீனாவில் விபரீதம்!
பெய்ஜிங்: சீனாவில் போனை சரியான நேரத்தில் எடுத்துப் பேசாத மனைவியின் மூக்கை கணவரே கடித்துத் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் சாங்டோங் மாகாணத்தை சேர்ந்தவர் யாங். சமீபத்தில் இவருடைய கணவர் இரவு 2 மணியளவில் போன் செய்து உள்ளார். யாங் இரவுப் பணியில் இருந்து உள்ளார். அதனால் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து யாங் மீது கோபம் கொண்ட அவருடைய கணவர் அவர் வேலை செய்யும் பகுதிக்கு சென்றார். இருவருக்குமிடையே சண்டை மூண்டுள்ளது.
கோபத்தில் மூக்கை கடித்த கணவர்:
உடனடியாக யாங் மூக்கை கணவர் கோபத்தில் கடித்து தின்றுவிட்டார். இதனை சீனப்பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு உள்ளது. செல்போன் அடித்தபோது எடுக்காத யாங் பின்னர் மீண்டும் முயற்சி செய்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசமான நிலையில் யாங்:
யாங்கின் மூக்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விட்டது. அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது மூக்கு சரியாக இயங்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
விவாகரத்து தம்பதிகள்:
இதற்கிடையே யாங் மற்றும் அவருடைய கணவர் திருமணம் செய்துக் கொண்டபோதே விவாகரத்து செய்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
விற்பனை செய்ய முயன்றதால் பிரச்சினை:
யாங்கின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. யாங்கின் குழந்தையை அவருடைய கணவர் விற்பனை செய்ய முயற்சித்ததால் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து விவாகரத்து ஆகி உள்ளது.
சரிசெய்ய முயற்சி:
ஆனால் அவ்வப்போது யாங்கிடம் அவருடைய கணவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. மூக்கை கடித்து தின்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார் யாங்கின் கணவரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். யாங்கின் மூக்கை சரிசெய்ய டாக்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.