மியான்மர் நிலநடுக்கம்.. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களை விட மறுக்கும் ராணுவம்
நைப்பிதா: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்திருக்கிறது. நிலநடுக்க பாதிப்புகளை ஆய்வு செய்ய சர்வதேச பத்திரிகையாளர் குழு உள்ளே செல்ல முயன்ற நிலையில், அந்நாட்டு ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது.
ஏராளமான கட்டிடங்கள் உடைந்து விழுந்திருக்கின்றன. மீட்பு பணிகள் அதிகமாக உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது தொடர்பாக செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் மின் துன் கூறுகையில், "வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இங்கு வந்து தங்குவதற்கோ, ஆய்வு செய்வதற்கோ அனுமதி கிடையாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். உள்ளூர் ஊடகங்களுக்கும் மியான்மரில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வழக்கமாக சர்வதேச ஊடகங்களுக்கு உள்ளூரில் நிறைய மரியாதை இருக்கும். ஆனால், மியான்மரில் அப்படி இல்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 28ம் தேதி மியான்மரில் பலத்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 7.7 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சீட்டுகட்டுகளை போல அப்படியே சரிந்தன. இது பற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. ஏற்கெனவே அந்நாடு தற்போது உள்நாட்டு போரை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நிலநடுக்கம் பாதிப்பு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
தொடக்கத்தில் நூறு பேர் மட்டும் உயிரிழந்ததாகவும், பலநூறு பேரை காணவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 2056ஆக இருப்பதாகவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 3000க்கும் அதிகமாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சில நாட்கள் வரை மீட்பு பணிகள் நடைபெறும்.
நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக மண்டலே இருக்கிறது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சாகைங், மண்டலே, மக்வே, ஷான், நே பி தா, பகோ ஆகிய பகுதிகளிலும் அதிக பாதிப்பு பதிவாகியிருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் எதிராக பல ஆயுதக்குழுக்கள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications