துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாகூர் ஹனிபாவுக்கு இரங்கல் கூட்டம்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மறைந்த பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் முன்னிலை வகித்தார்.

துணைப் பொதுச் செயலாளர் ஏ. முகம்மது தாஹா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனிபாவின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். தனது வசீகரக் குரலால் மட்டுமல்லாது இஸ்லாமிய கருத்துக்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடியுள்ளார்.
இவை பட்டிதொட்டியெங்கும் மட்டுமல்லாது கடல் கடந்து வாழும் தமிழர்கள் உள்ள பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது மறைவுக்கு ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவிக்கிறது என்றார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை தரவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
கல்விக்குழு செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், நலத்துறை செயலாளர் பைஜுர் ரகுமான், இக்பால், காதர், யாகூப் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications