நாம் நினைப்பதைவிடவும் ”கண்ணைப் பறிக்கும்” பிரகாசமாயுள்ளது பிரபஞ்சம்- நாசா தகவல்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பிரபஞ்சம் நாம் நினைப்பதை விடவும் பலமடங்கு வெளிச்சமாக உள்ளதென்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு மேல் உள்ள அண்ட பிரபஞ்சம் இருட்டாகவும், மங்கலான வெளிச்சத்திலும் இருப்பது போன்ற எண்ணம் உள்ளது. ஆனால் பிரபஞ்சம் நாம் நினைப்பதை விட மிக பிரகாசமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய சோதனை ஒன்றை நடத்தினர். அதில் இருட்டு பகுதிகளில் விண்மீன் கூட்டங்களுக்கு இடையே ஒளி வெள்ளம் பாய்கிறது.
அதுவே விண்மீன்களுக்கு ஒளி கொடுத்து மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை கொடுக்கிறது. அதனால்தான் நாம் பூமியில் இருந்து நட்சத்திரங்களை காண முடிகிறது என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications