மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்க பொறியாளர் ”ஜான் சி ஹூபோல்ட்” உயிரிழப்பு
வாஷிங்டன்: மனிதர்களை நிலவுக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் இன்று காலமானார்.அவருக்கு வயது 95.
நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட் தனது 95 ஆவது வயதில் இன்று காலமானார்.
இதுகுறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்வெளித் துறையில் ரஷியாவுடன் கடும் போட்டி நிலவி வந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஹூபோல்ட் முக்கியப் பங்காற்றினார்.
பூமியிலிருந்தே நேரடியாக மிகப்பெரிய ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பதிலாக, நிலவில் சுற்றுவட்டப் பாதையிலிருந்து சிறிய ஓடம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதே சிறந்ததாக இருக்கும் என அவர் வாதாடி, அதற்கான ஒப்புதலை அதிபர் ஜான் கென்னடியிடமிருந்து பெற்றார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாஸாவிலிருந்து 1976 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஹூபோல்ட், அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் விண்வெளித்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications