ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் நிலையம் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை.
கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்திருக்கிறது. ஈரான்-இஸ்ரேல் போர் 4வது வாரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

தெஹ்ரானிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள நடான்ஸ், ஈரானின் முதன்மை யுரேனியம் செறிவூட்டும் தளமாகும். இத்றகு முன்னரும், இந்த மையம் பலமுறை குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் புது தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு மத்தியில் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அன்று, இப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைத்து வருவதாக அறிவித்தார். அதேசமயம், அமெரிக்கா தனது படைகளை அதிகரித்து, மூன்று கூடுதல் கடற்படை தாக்குதல் கப்பல்களுடன் சுமார் 2,500 கடற்படையினரையும் இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ஒருபுறம் போரை முடித்துக்கொள்ளலாம் என்று கூறுவதும், மறுபுறம் ஈரானை நோக்கி கூடுதல் படைகளை அனுப்புவதும், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த நிலைப்பாடு, பரவலான போர் விரிவாக்கம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் நோக்கி ஈரான் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் அனுப்பியிருந்தது. இவற்றில் சிலவற்றை சவுதி அரேபியா இடைமறித்ததாகக் கூறியது.
இந்த போர் காரணமாக, உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, அமெரிக்கப் பங்குகளில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதால், எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய எண்ணெய் மீதான சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்க நிர்வாகம் நீக்கியுள்ளது.
அதாவது ஏற்கெனவே பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்காக கப்பலில் லோட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணெய்யை மட்டும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்துக்கொள்ளவும், இதை வாங்க உலக நாடுகளுக்கு எந்த தடையும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications