வங்கதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 120 பேர் நீரில் மூழ்கி பலி?
முன்ஷிகஞ்ச்: வங்கதேசத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த சுமார் 120 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.
வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டம் மதாரிபூரில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பத்மா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடந்த திங்கட்கிழமை கவிழ்ந்த படகில் இருந்து 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் பத்மா ஆற்றில் மீட்புக்குழுவினர் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

120 பேர்
செவ்வாய்க்கிழமை முழுவதும் தேடியும் எந்த சடலமோ, நபர்களோ கிடைக்கவில்லை. படகில் பயணம் செய்தவர்களில் 120 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதனால் அவர்கள் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

படகு
மீட்புக்குழுவினர் பத்மா ஆற்றில் இரண்டு நாட்களாக தேடியும் மூழ்கிய படகை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஓவர்லோடு
ஆற்றில் மூழ்கியது சிறிய ரக படகு. அதில் 85 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அப்படி இருக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததால் தான் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துவிட்டது.

வழக்கமானது
வங்கதேசத்தில் படகுகளில் அளவுக்கு அதிகாமானோரை ஏற்றுவதால் அங்கு படகு விபத்து என்பவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மேலும் படகையும் சரியாக பராமரிப்பதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications