இந்திய வம்சாவளி மாதேசி பிரச்சினையில் திடீர் திருப்பம்: அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நேபாளம் முடிவு
காத்மாண்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் சிறுபான்மை இன மக்களாக உள்ளனர். இவர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், இது குறித்து அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்திய நேபாள எல்லை பகுதியில் 50 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் மற்றும் மாதேசி சமுதாய ஆர்ப்பாட்ட குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியார்களிடம் பேசிய அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் சோம் பிரசாத் பாண்டே, பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி பங்கீடு ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படும். இது தவிர குடியுரிமை அற்ற மக்களுக்கு குடியுரிமை வழங்குவது உட்பட மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் நீண்ட நாட்களாக நேபாளத்தில் தொடர்ந்து வந்த போராட்டங்களுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நேபாள அரசின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications