நேபாள நிலநடுக்கம்: ஐரோப்பாவை சேர்ந்த 1,000 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 1,000 சுற்றுலா பயணிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்நிலநடுக்கத்தில் 12 ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பாவை சேர்ந்த 1000 பேரை காணவில்லை என்றும் இதுவரை 12 பேர் இறந்துள்ளதாகவும் நேபாளத்திற்கான ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் ரேன்ஸ்ஜ் டேரின்க் தெரிவித்துள்ளார்.

Nepal quake: 1,000 EU citizens still unaccounted for, says envoy

மேலும் காணாமல் போனவர்கள் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களையும், மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 6134 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை இருக்கும் என்று நேபாள பிரதமர் கூறியிருந்தார். ஆனால் இடிபாடுகளுக்குள் இன்னமும் ஏராளமானவர்கள் கிடப்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று நேபாள ராணுவ தலைமை தளபதி கவுரவ் ராணா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+