பிரதமர் நரேந்திர மோடியுடன் நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
காத்மண்டு: பிரதமர் நரேந்திர மோடியை நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தா இன்று சந்தித்து பேசினார்.
நேபாளத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அந்நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ், பிரதமர் கொய்ராலா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

பின்னர் நேபாள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவும் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசந்தா, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. நரேந்திர மோடியுடனான சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அமைதி முயற்சிகளுக்கு மோடி ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications