16,000 பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. கதறும் ஊழியர்கள்.. பின்னணி
சென்னை: பிரபல நிறுவனமாக செயல்பட்டு வரும் ‛நெஸ்லே'வில் அடுத்த 2 ஆண்டுகளில் 6 சதவீதம் பேரை அதாவது 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‛நெஸ்லே' நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நெஸ்லே (Nestle).. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் சார்பில் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், தண்ணீர், குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவு பொருட்களை விற்பனை செய்கிறது.

இதுதவிர குழந்தைகள், நாய்களுக்குகான ஸ்பெஷல் உணவு பொருட்கள், புரோட்டீன் சார்ந்த உணவு பொருட்களை வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ‛நெஸ்லே' நிறுவனம் ஸ்விட்சர்லாந்தின் வெவே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நாடுகளிலும் தனது தயாரிப்புகளை வெவ்வேறு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தான் ‛நெஸ்லே' நிறுவனம் அதிரடியாக 6 சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது 16 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய ‛நெஸ்லே' முடிவு செய்துள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் தயாரிப்பு மற்றும் சப்ளை செயின் பிரிவில் பணியாற்றுவர்கள் என்றும், 12 ஆயிரம் பேர் ஒயிட் காலர் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிப்பது, வருமான இழப்பை சரிசெய்வது உள்ளிட்டவற்றை இலக்காக கொண்டிருப்பதால் இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நெஸ்லே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிறுவனத்தில் ஆட்டோமேஷன் வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இதுபற்றி நெஸ்லே செய்தி தொடர்பாளர் ஃபார்ச்சூன் பத்திரிகையிடம் கூறுகையில், ‛‛எங்களின் இந்த முயற்சி பணி முறையை மாற்றும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் அமைப்பு, செயல்முறைகளை நெறிமுறைப்படுத்தி ஆட்டோமேஷன், டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
இதனால் நெஸ்லே நிறுவன ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணி நீக்க நடவடிக்கையில் வேலையை இழக்க வேண்டுமோ? என்ற அச்த்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் நிறுவனத்தின் வருமானம் தான்.
அதாவது நெஸ்லேவின் வருமானம் சரிவை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்த வருமானத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருமானம் 1.9 சதவீதம் வரை குறைந்து 83.8 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த வருமான இழப்பும் பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications