தைவான் விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்
லண்டன்: தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தினாலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாக இங்கிலாந்து இணையதளம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடினார். அதே நேரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போரிட்டது.
இந்நிலையில், தைவானில் கடந்த 1945ன் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்றும், இல்லை அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வாழ்ந்தார் என்றும் இருவேறு தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து நேதாஜியின் மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப் படவில்லை.

போஸ் பைல்ஸ்...
இந்த சூழ்நிலையில், நேதாஜியின் விமான விபத்தின் போது நடந்தவைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளமான www.bosefiles.info தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

விமான விபத்து...
கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள், அதாவது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்களை இந்த இணையதளம் வெளியிட்டது.

சாட்சிகள்...
அதனை தொடர்ந்து, தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியானது.

நேதாஜியுடன்...
அதில், "1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில், ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேதாஜியின் மரணம்...
அதனை தொடர்ந்து விமான விபத்தன்று நடந்த சம்பவங்களை ஆவணங்களாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் நேதாஜி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி...
மேலும், நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications