ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும்.. போர் இன்னும் முடியவில்லை! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
டெல் அவிவ்: ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஏற்கெனவே போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ராஃபாவில் நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த மூவர், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியது. இதில், கட்டிடம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதில் உயிரிழந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டபோது, மூன்று சடலங்களில் ஒன்று ஹமாஸ் தலைவர் என்பதை கண்டுபிடித்தது.

இது குறித்து அறிவிப்பு வெளியாகினாலும், உயிரிழந்தது ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா்தான் என்பதை உறுதி செய்ய மரபணு சோதனையை மேற்கொண்டது. இதில் யாஹா சின்வாா் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவரது இறப்பை இஸ்ரேல் உறுதி செய்தது.
ஹமாஸை அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று அதன் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இந்த போரில் 42,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், யாஹா சின்வாா் இறப்புடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதையே கூறியிருந்தார். ஆனால் இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு போர் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
அதாவது, "நேற்று ராஃபாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் துணிச்சலான வீரர்களால் சின்வர் இறந்துவிட்டார். இதன் மூலம் போர் இறுதி கட்டத்தில் நுழைந்திருக்கிறது. போர் முடியவில்லை. ஹமாஸ் படையினர் ஆயுதங்களை போட்டுவிட்டு, அவர்கள் கடத்தி சென்றிருக்கும் 23 நாடுகளை சேர்ந்த 101 பணயக்கைதிகளை விடுவிக்கும்பட்சத்தில் போர் முடிவடையும்.
இஸ்ரேலிலிருந்து பிடித்து செல்லப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணயக்கைதிகளை நாங்கள் உயிருடன் மீட்டு வருவோம் என்று உறுதி கூறுகிறேன். ஈரானால் கட்டமைக்கப்பட்ட பயங்கரவாதம், நம் கண் முன்னே சரிந்து விழுந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வரும். விரைவில் மத்திய கிழக்கில் அமைதியும், செழிப்பும் திரும்பும்" என்று கூறியுள்ளார்.
நெதன்யாகுவின் இந்த அறிவிப்பால் மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதாக ஹமாஸ் விமர்சித்திருக்கிறது.
-
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications