உங்களுக்கு டென்ஷன், பதற்றம் இருக்கா?.. கவலைய விடுங்க, ஒரே நாளில் சரியா போகும்!
நியூயார்க்: மனச்சோர்வு பிரச்சினையை மாத்திரை மூலம் ஒரே நாளில் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்றைய காலகட்டத்தில் மன உளைச்சலும், அதைச் சார்ந்த மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகளும் மக்களுக்கு சாதாரணமாகிவிட்டன. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட உணவு, துரித வாழ்க்கை முறை போன்றவை இதற்கு காரணம்.

மாதக்கணக்கில் சிகிச்சை
மனச்சோர்வுக்கு ஆளானவர்களுக்கு தற்போது, கவுன்சலிங் மூலமும், மாத்திரைகள் மூலமும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மிகவும் தாமதமாக மருத்துவர்களை அணுகுவோருக்கு ஷாக் ட்ரீட்மென்டுகள் கொடுக்கப்படுவதும் உண்டு. பொதுவாக மருந்துகளை மாதக்கணக்கில் எடுத்துக்கொண்டால்தான், படிப்படியாக மனச்சோர்வு குணமடையும்.

24 மணி நேரம்
இந்நிலையில்தான், மனச்சோர்வை குறைந்த நாட்களில் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேரிலேண்ட் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ஸ்காட் தாம்ப்சன் கூறுகையில், புதிய மருந்து 24 மணி நேரத்தில் மனச்சோர்வை விரட்டும் என்றார்.

பக்க விளைவு இல்லை
புதிய வகை மூலப்பொருட்களால் உருவாக்கப்படும் மனச்சோர்வு விரட்டி மருந்தால், பக்க விளைவுகளும் ஏற்படாதாம். இந்த மருந்து, மூளையுடன் மட்டுமே செயல்படக்கூடியது. மருந்தின் மூலக்கூறுகள் எலியின் உடலில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியான செயல்பாட்டை எலிகள் உடனே காண்பித்தனவாம்.

பயன்படும்
இம்மருந்து மூலம், 24 மணி நேரத்திற்குள் மனச்சோர்வை நீக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் மனிதர்களிடம் இம்மருந்து சோதித்து பார்க்கப்படவில்லை. தற்கொலை எண்ணத்தோடு இருக்கும், மனச்சோர்வாளர்களுக்கு கூட உடனடியாக மன மகிழ்ச்சியை தர வல்ல இந்த மூலப்பொருள், வருங்காலங்களில் பலருக்கும் பயனுடையதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications