எல்லை ஆக்கிரமிப்பு விவகாரம்- மோடியின் குற்றச்சாட்டுக்கு சீனா பதில்

குஜராத் மாநில முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, அருணாசலபிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார்.
மேலும் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்கும் வல்லமை உலகில் எந்த ஒருநாட்டிடமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், சீனா, நாடு பிடிக்கும் கொள்கையை பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றுவதற்கு கூட சீனா போர் தொடுத்தது இல்லை.
எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக ராணுவ மோதல்கள் நடந்தது இல்லை. எல்லையில் அமைதியை கட்டிக்காக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி.
இது, வருங்காலத்தில் இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு நல்லது. இது, இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் நல்லது.
இந்தியாவுடன் எல்லை பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினையை மட்டுமின்றி, எல்லா பிரச்சினைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே சீனா விரும்புகிறது. இதற்காக இரு நாடுகளும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கருதுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications