"அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை" பகீர் கிளப்பும் தாலிபான்
காபூல்: டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா கூறியநிலையில், 'அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை' என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய தீவிரவாதியாக கருதப்பட்ட அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடன் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினார்.
இதனால் கடும் கோபம் அடைந்த அமெரிக்கா அவரை பாகிஸ்தான் நாட்டில் ஸ்கெட்ச் போட்டு சுட்டு கொன்றது.

மிகப்பெரிய தீவிரவாதி
இதைத்தொடர்ந்து அல் கொய்தா தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் அய்மான் அல் ஜவாஹிரி இருந்து வந்தார். அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் நிதி தலைநகரான நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் தாக்குதல் நடத்தியதில் மிக முக்கியமானவராக இருந்தார். உலகம் முழுவதும் பெரிதான இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து அவரை கொல்வதற்கும் திட்டம் தீட்டி வந்தது. இதற்காக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வந்தது.

டிரோன் மூலம் தாக்குதல்
தொடர்ந்து அவரை கொல்வதற்கு அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்காக அய்மான் அல் ஜவாஹிரியின் செயல்களை கண்காணித்து வந்த சிஐஏ உளவு அமைப்பு, பல முறை அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. எனினும் அவர் அதில் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அய்மான் அல் ஜவாஹிரியை நேற்று அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

மவுனம் காத்து வந்த தாலிபான்கள்
அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாகிரி, அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தாலிபான்கள் மத்தியிலும் எதிரொலித்தது. இதற்கு தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்குள் சென்று அமெரிக்கா டிரோன் தாக்குதலை நடத்தி அய்மான் அல் ஜவாகிரியை கொன்றதற்கு முதலில் கண்டனம் தெரிவித்து இருந்தனர். எனினும் இவ்விகாரத்தில் அதிகம் பேசாமல் தாலிபான்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர்.

தடயம் எதுவும் இல்லை
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் தாலிபான்களின் பிரதிநிதியாக உள்ள சுஹைல் ஷாகீன் கத்தார் தலைநகர் தோஹாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்கா சொல்வதின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் பொது வெளியில் பகிரப்படும். ஆனால், அய்மான் அல் ஜவாஹிரி விவகாரத்தில் அமெரிக்கா கூறுவது பற்றி ஆப்கானிஸ்தான் அரசுக்கோ அதன் தலைமையோ எதுவும் அறிந்து இருக்கவில்லை. அதற்கான தடயம் எதுவும் இல்லை" என்றார்.
Recommended Video

குழப்பம்
அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் டிரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது பற்றி தலிபான்கள் விசாரித்து வருவதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்தார். மேலும் அல்கொய்தா தலைவர் காபூலில் இருந்தது தாலிபான் தலைமைக்கு தெரியாது எனவும் மறைமுகமாக தனது பேட்டியின் போது சுட்டிக்காட்டும் வகையில் பேசினார். டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா கூறியநிலையில், 'அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை' என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications