Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா இல்லை.. ஆனாலும் வடகொரியாவில் திடீர் ஊரடங்கு.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: மர்மதேசமான வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜான் உன் வித்தியாசமான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவும் வித்தியாசமான முறையில் இருக்கும். அந்த வகையில் தான் வடகொரியாவில் கொரோனா பரவல் இல்லாத நிலையிலும் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது தற்போது வெளியாகி உள்ளது.

உலகில் மர்மதேசங்களில் ஒன்றாக வடகொரியா உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டின் அதிபர் கிம் ஜான் உன் ஆவார். வடகொரியாவில் நடக்கும் விஷயங்கள் ஒன்றும் வெளியில் தெரிவது இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் நாட்டை வழிநடத்தும் கிம் ஜான் உன் கடும் விதிகளை அங்கு அமல்படுத்தி உள்ளார்.

இந்த விதிகளை மீறும் நபர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையிலும் தற்போது வடகொரியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அது ஏன்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

கொரோனா இல்லை என பெருமை

கொரோனா இல்லை என பெருமை


சீனாவில் இருந்து கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அந்த வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்தது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. ஆனால் தங்கள் நாடுகளில் கொரோனா பரவல் இல்லை. உயிர் பலி இல்லை என வடகொரியா பெருமையாக கூறியது.

கண்காணிப்பில் படை வீரர்கள்

கண்காணிப்பில் படை வீரர்கள்

மேலும் அண்டை நாடான சீனாவில் இருந்து கொரோனா பரவிவிடக்கூடாது என வடகொரியா தனது எல்லையை மூடியது. மேலும் வேறு நாடுகளில் இருந்து வடகொரியாவில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் கடந்த 2020ல் வடகொரியாவின் ரியாங்காங் வடக்கு மாகாணத்தில் உள்ள ஹீசான் நகரில் கண்காணிப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

653 குண்டுகள் மாயம்

653 குண்டுகள் மாயம்

இந்நிலையில் ராணுவ வீரர்கள் சமீபத்தில் அங்கிருந்து முகாம் திரும்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி மாதம் 25ம் தேதியில் இருந்து மார்ச் 10ம் தேதி வரை வீரர்கள் எல்லை பகுதிகளில் இருந்து முகாம் திருப்பினர். இந்நிலையில் தான் கடந்த 7ம் தேதி மொத்தம் 653 குண்டுகள் மாயமாகி உள்ளன. இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை படை வீரர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஊரடங்கு பிறப்பிப்பு

ஊரடங்கு பிறப்பிப்பு

இந்நிலையில் குண்டுகளை கண்டுபிடிக்கும் வகையில் ஹீசான் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கிம் ஜான் உன் பிறப்பித்துள்ளார். இந்த நகரில் 2 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் தற்போது அவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளுக்குள் நுழைந்து வீரர்கள் குண்டுகளை தேடி வருவதாக தற்போது வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+