இதெல்லாம் சாம்பிள்தான்.. அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டும் வடகொரியா!
பியாங்க்யாக்: வெளிநாட்டு தீய சக்திகளின் அச்சுறுத்தல் காரணமாகவே ஏவுகணை சோதனை செய்யப்பட்டது என வடகொரியா தெரிவித்துள்ளது.
கொரிய எல்லையில் அமெரிக்கா, தென் கொரியாவின் ராணுவ படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அந்த இரு நாடுகளும் கூட்டு பயிற்சி பெற்று வந்தன.
இதனால் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, வடகொரியா தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயிருந்தது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஏவுகணை
எனினும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தது. ஆனால் அவை சிறிய ரக ஏவுகணைகள் என டிரம்ப் கூறியதை அடுத்து கிம் ஜாங்குடன் நல்ல உறவு முறை இருந்தது.

ஏவுகணை
இந்த நிலையில் அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்காவும் வடகொரியாவும் வரும் 5-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியாவின் வன்சான் நகரில் கிழக்கு கடற்பகுதியில் 2 ஏவுகணைகளை நீர் மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா விண்ணில் நேற்று செலுத்தி சோதனை செய்தது.

சிறப்பு பொருளாதார
அதில் ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் விழுந்தது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஏவுகணை குறித்த விவரம் குறித்து தெரியவில்லை.

அச்சுறுத்தல்
இது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் செயல் என ஜப்பான் கூறியுள்ளது. இதுகுறித்து வடகொரியா கூறுகையில் வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும் இதை செய்துள்ளோம் என்றனர்.

அமெரிக்கா
அமெரிக்காவும் வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்தும் போது தோல்வி ஏற்பட்டால் தாங்கள் யார் என காண்பிக்கவே இது போன்ற ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என தெரிகிறது. மேலும் வெளிநாட்டு சக்திகள் என வடகொரியா, கூறியுள்ளது அமெரிக்காவைத்தான் என்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications