வட கொரியா ராணுவ அணிவகுப்பில் காட்டிய புதிய சக்தி வாய்ந்த ஆயுதம்.. அதிர்ந்த உலக நாடுகள்!
பியோங்யாங்: கம்யூனிச நாடான வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடந்த இராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற ஆயுதம் உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய திரவ ஏவுகணையான இது உளவு செயற்கைகோள்களில் இருந்து தப்பும் வல்லமை உடையது.
வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த விழா அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இந்த விழாவில் இராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் மிக முக்கியமான ராட்சத டிரக்கில் உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படும் நவீன ஆயுதம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய இந்த புதிய ஏவுகணை இதுவரை சோதனை செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மிகப்பெரிய ஆயுதத்தை வட கொரியாவின் பல போர்க்கப்பல்களில் பயன்படுத்த முடியும். இது இலக்கு வைக்கப்பட்ட எந்த எதிரி நாட்டையும் தாக்கும் உள்ள பயங்கர ஏவுகணை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அணு ஆயுத ஏவுகணை
மிகப்பெரிய துல்லியமான திரவ எரிபொருள் ஏவுகணை என்று சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் அணுசக்தி கொள்கை திட்டத்தின் மூத்த சக அன்கித் பாண்டா ட்வீட் செய்துள்ளார்." இந்த திரவ எரிபொருள் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது" என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் திறந்த அணு வலையமைப்பின் துணை இயக்குநர் மெலிசா ஹன்ஹாம் ட்வீட் செய்துள்ளார்.

புதிய ஏவுகணை எப்படி
"வட கொரியா எங்களுக்குக் காட்டியது என்னவென்றால், ஹவாசோங் -15 என அழைக்கப்படும் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோதிக்கப்பட்ட ஏவுகணையின் வழித்தோன்றலாக இந்த புதிய திரவ எரிபொருள் ஏவுகணை இருக்கும் என்று தோன்றுகிறது. இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது. மிக துல்லியமான சக்தி வாய்ந்தது "என்று அமெரிக்காவை அடிப்படையாக கண்ட கொரிய நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ஹாரி காசியானிஸ் கூறினார்.

அணுஆயுத ஏவுகணை
2017 இல் ஹ்வாசோங் -15 சோதனை செய்யப்பட்டபோது, வடகொரிய "ஒரு சூப்பர்-ஹெவி அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட ஆயுதம்" என்று கூறியது. ஆய்வாளர்கள் அமெரிக்காவின் பெரும்பகுதியைத் தாக்கும் வரம்பைக் கொண்டிருக்கும் என்று நம்பினர் எனவே இன்று வந்துள்ள ஆயுதம் அதை விட அமெரிக்காவிற்கு நிச்சயம் பெரும் அச்சுறுத்தல் தரும் ஏவுகணையாக பார்க்கப்படுகிறது.

நகர முடியும்
வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தும் முன்னரே, திட எரிபொருள் பாலிஸ்டிக் ஏவுகணையை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறி ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
எதிர்பார்த்ததை போல வெளியிட்டது. திட எரிபொருள் ஏவுகணைகள் திரவ எரிபொருளைக் காட்டிலும் பெரும் நன்மையை வழங்குகின்றன, அவற்றால் எரிபொருள் லாரிகள் இல்லாமலே நகர முடியும். அதாவது உளவு செயற்கைக்கோள்களிலிருந்து மிக விரைவாக ஏவப்பட்டு எளிதாக மறைத்துவிட முடியும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications