ஹாலிவுட் தம்பதி பிராஞ்சலினா பிரிய அவர் இல்லை 'இந்த' நடிகை காரணமாம்!
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஏற்கனவே தனது கணவர் பிராட் பிட்டை பிரிந்து வாழ்கிறாராம். அவர்கள் பிரிய நடிகை காரா இல்லை மாறாக நடிகை மரியான் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து பிட் தனது மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனை பிரிந்தார். ஹாலிவுட்டின் அழகு தம்பதியான பிராட் பிட், ஜெனிபர் ஆனிஸ்டனை ஜூலி பிரித்துவிட்டதாக அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை மரியான் கோடில்லார்ட் தான் பிட்டை ஆனிஸ்டனிடம் இருந்து பிரித்தது போன்று தன்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் உள்ளாராம் ஜூலி.
மரியானால் பிட்டும், ஜூலியும் விவாகரத்து பெற உள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் ஏற்கனவே பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனியும் ஜூலியுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் பிட்.
முன்னதாக ஜூலி, பிட் விவாகரத்து பெற நடிகை காரா டெலவிஞ்ச் தான் காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications