கனடாவில் நடைபெற்ற ஜி 8, ஜி 20 மாநாடுகளை உளவு பார்த்தது அமெரிக்கா!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:
கனடாவின் டொரான்டோ நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அவர்களின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளது. இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் முழுஒத்துழைப்பு அளித்துள்ளது.
இதேபோல் கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டையும் அமெரிக்கா அமைப்பு உளவு பார்த்துள்ளது. இவ்வாறு அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜி-20, ஜி-8 மாநாடுகளில் பங்கேற்ற உலகத் தலைவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications