Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோமில் லிஃப்டுக்குள் 3 நாட்கள் உணவு, நீரின்றி சிக்கித் தவித்த 2 கன்னியாஸ்திரிகள்

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் லிப்டுக்குள் சிக்கிய 2 கன்னியாஸ்திரிகள் 3 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மாரிஸ்ட் கான்வென்ட்டுக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த 69 வயது கன்னியாஸ்திரியும், அயர்லாந்தைச் சேர்ந்த 58 வயது கன்னியாஸ்திரியும் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் இருவரும் லிப்டில் ஏறியதும் மின்சாரப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Nuns survive three days trapped in Rome lift

லிப்டுக்குள் அவர்கள் இருப்பது தெரியாமல் அந்த கான்வென்ட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். உதவி கேட்ட கதறிய கன்னியாஸ்திரிகளின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவர்கள் உணவு, தண்ணீர் இன்றி 3 நாட்களாக லிப்டுக்குள் பிரார்த்தனை செய்தவாறே பொழுதை கழித்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கட்கிழமை காலை துப்புரவு தொழிலாளி ஒருவர் லிப்டுக்குள் 2 கன்னியாஸ்திரிகள் சிக்கியிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து கன்னியாஸ்திரிகளை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

லிப்டுக்குள் இருக்கையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்ததாக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+