அமெரிக்கா வரலாற்றிலேயே மிக நீண்ட போர் முடிவுக்கு வந்தது: ஆப்கன் யுத்தம் பற்றி ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றியே மிக நீண்டகாலம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டின் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலை அடுத்து அல்கொய்தா இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ படைகளும் முகாமிட்டன. அல்கொய்தா மற்றும் தலிபான்களுக்கு எதிராக 13 ஆண்டுகாலமாக யுத்தம் நடத்தி வந்தன நேட்டோ படைகள்.

இந்த ஆண்டுடன் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் மொத்தம் 2,200 அமெரிக்கா வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேட்டோ படைகள் வெளியேறுவதையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஒபாமா, ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அமெரிக்கா படைகளும் அரசியல் வல்லுநர்களும் உதவியிருக்கின்றனர். அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட காலம் நீடித்த யுத்தம் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் அபாயத்தையே எதிர்கொண்டிருக்கிறது. தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் ஆப்கான் மக்களும் பாதுகாப்புப் படையினரும் அளப்பரிய தியாகம் செய்து வருகின்றனர். அதிபராக நான் பதவியேற்ற போது ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் 1,80,000 அமெரிக்கா வீரர்கள் நிலை கொண்டிருந்தனர். தற்போது இது 15 ஆயிரத்துக்கும் குறைவாக்கப்பட்டுள்ளது. 90% அமெரிக்கா வீரர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications