ஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்
ஹாங்காங் நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த, முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங் நாட்டில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 2014-ல் அம்பர்லா இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை முன்னெடுத்த சான் கின்-மேன் மற்றும் பென்னி தாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு, ஹாங்காங் உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் மத்தியில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான லீ விங் டாட் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் இந்த கூட்டத்தை பார்க்கும் போது நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஹாங்காங் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. நான் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை காண போகிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
ஜனநாயக ஆதரவு போராட்ட தலைவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கின் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், மெழுகுவர்த்திகளை கையில் பிடித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.
ஹாங்காங் நாட்டில் வெடித்துள்ள இந்த போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ல் நடத்தப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். 3 மாதங்கள் ஹாங்காங்கையே உலுக்கிய இந்த போராட்டத்தை போல, மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications