ஓமனை வறுமையிலிருந்து மீட்ட.. மன்னர் சுல்தான் காபூஸ்.. 79 வயதில் மரணம்
மஸ்கட்: ஓமன் நாட்டு அரசர் சுல்தான் காபூஸ் சயீத் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது இறப்பை ஓமன் அரசு உறுதி செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்டகாலமாக ஆட்சி செய்தவர் சுல்தான். அவரது ஆட்சி காலத்தில் ஓமன் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார். மேலும் அந்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டினார்.

எண்ணெய் வளத்தை வைத்து தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு ஸ்டேடியம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினார்.
இவரது தனது 29 ஆவது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு அடுத்த அரசர் யார் என்பதையும் இவர் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றைய தினம் காலமானார். இவரது இறப்பை ஓமன் நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் அதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. புற்றுநோய்க்காக ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இவரது பிறந்த நாளான நவம்பர் 18-ஆம் தேதி ஓமன் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரது தந்தை சயீத் பின் தைமூர் ஆட்சி காலத்தில் இருந்த ஓமனை உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாற்றியவர் காபூஸ். இவரது தந்தை ஆட்சி காலத்தில் அவரது அனுமதியின்றி சிமெண்ட் வாங்குவதோ மூக்கு கண்ணாடிகளை அணிவதோ கூடாது.
கடந்த 2011 ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்பட்ட 3 அமெரிக்கர்களை விடுதலை செய்யுமாறு காபூஸ் கேட்டுக் கொண்டார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வித்திட்டவர். இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லாததால் அடுத்த அரசரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications