இரட்டை கோபுர தாக்குதலை டிவியில் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஆர்லான்டோ கொலையாளி
ஆர்லான்டோ: 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்ததை டிவியில் பார்த்த பள்ளி மாணவன் உமர் மாட்டீன் தீவிரவாதிகளை பாராட்டி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மகாணாத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் செயல்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற உமர் மாட்டீன் பற்றி மேலும் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பள்ளி காலத்திலேயே உமருக்கு தீவிரவாதம் மீது ஈர்ப்பு இருந்துள்ளது.

இரட்டை கோபுரங்கள்
நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்கினர். இந்த சம்பவத்தால் அமெரிக்கா மட்டும் இன்றி உலகமே அதிர்ச்சி அடைந்தது.

உமர்
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது உமர் மாட்டீன் மார்ட்டின் கவுன்ட்டி உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீவிரவாத தாக்குதல் செய்தியை டிவியில் பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.

மகிழ்ச்சி
இரட்டை கோபுரங்கள் மீது விமானங்கள் மோதியதை டிவியில் பார்த்த உமர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார். மேலும் தாக்குல் நடத்திய தீவிவாதிகளை அவர் பாராட்டித் தள்ளியுள்ளார். இதை அவருடன் படித்த மாணவர் ராபர்ட் ஜிர்கில் தெரிவித்துள்ளார்.

விமானம்
அந்த துயர சம்பவம் நடந்த அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பேருந்தில் விமானம் போன்று சப்தம் செய்துள்ளார் உமர். 9/11 சம்பவத்திற்கு பிறகு உமர் மாறிவிட்டார். அவனுக்கு பள்ளியில் நண்பர்களே கிடையாது என்கிறார் ராபர்ட்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications