”தொழில்நுட்பம் நிறைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம்” - சி.ஓ.க்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்ச
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, "நாம் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் வாழ்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அதே நேரத்தில், இந்தியாவிற்கு முதலீடு ஈர்க்கும் விதமாக, அமெரிக்காவில் செயல்படும் பல்வேறு நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவின் நிதித் தலைநகராகத் திகழும் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் மகன், சஜீப் வசெத் மற்றும் இரு நாட்டு அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, முதலீட்டு வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு விரைவில் நீக்கும் எனவும் உறுதியளித்தார். இந்தியா-அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், சேர்மனுமான அஜய் பங்காவை மோடி சந்தித்து உரையாடினார்.
செஞ்சுரி பாக்ஸ், சோனி, டிஸ்கவரி, டைம் வார்னர், ஏ அண்டு இ, வைஸ் மீடியா இவையனைத்தையும் ஒருங்கிணைக்கும் ரூபர்ட் முர்டோக் நியூஸ் கார்ப்பரேசன், டிஸ்கவரி, சோனி, ஈ.எஸ்.பி.என், டிஸ்னி இண்டஸ்ட்ரீஸ், ட்வெண்டி பர்ஸ்ட் செண்ட்யுரி பாக்ஸ், நியூஸ் கார்ப் போன்ற சர்வதேச ஊடக மற்றும் தொடர்பியல் நிறுவங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்ட 47 தலைமை நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊடகம் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப உலகின் சமீபத்திய நிலவரங்கள், மற்றும் அதில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் மோடி உரையாடினார். தனது 6 நாள் அமெரிக்க பயணத்தில், அதிபர் ஒபாமா உட்பட இன்னும் பல முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "நாம் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் இருக்கிறோம். சர்வதேச முதலீடுகள் மற்ற நாடுகளில் குறைந்திருந்தாலும் இந்தியாவில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் உறுதியைப் பறை சாற்றுகின்றது. " என கூறினார். வர்த்தக கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர் நடந்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications