விமான விபத்தில் பலியானார் நேதாஜி... நேரில் பார்த்த சாட்சியத்துடன் பிரிட்டிஷ் இணையதளம் செய்தி!
லண்டன்: தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. அவர் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக ஒரு தரப்பினரும், இல்லை அதற்குப் பின்னரும் அவர் உயிர் வாழ்ந்தார் என ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேதாஜி விமான விபத்தை சந்தித்த நாளில் என்ன நடந்தது என்ற ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சந்தேகம்...
கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.

சம்பவத்தன்று...
1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர்.

திட்டம்...
அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது" என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து...
கடந்த சில தினங்களுக்கு முன், நேதாஜியின் இந்த விமானப் பயணத்திற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்தகட்டம்...
இதன் அடுத்தகட்டமாக வருகிற 16ம் தேதி நேதாஜியின் விமான விபத்தைத் தொடர்ந்து, அன்றிரவு நடந்த சம்பவங்களை இந்த இணையதளம் வெளியிட உள்ளது.

நேதாஜியின் உறவினர்...
தொடர்ந்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு வரும், இந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications