உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகத்திற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு!
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா.
விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன.
£14, 697 raised overnight by 506 people! What a lovely surprise to wake up to!!We're overwhelmed by your support...
Posted by The Ol Pejeta Conservancy on Tuesday, April 14, 2015
கென்யாவில் மூன்று...
இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன. இது தவிர மீதமுள்ள மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. கென்யாவில் உள்ள மூன்று வெள்ளைக் காண்டாமிருகங்களில் ஒன்று ஆண்.
தோல்வி...
மரணத்திற்கு முன்னதாக ஆங்கலீஃபூவை அதே மிருகக்காட்சிசாலையில் அங்கிருந்த பெண் கண்டாமிருகமான நோலாவுடன் சேரவிட்டு இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
செயற்கைக் கருவூட்டல்...
எனவே, வெள்ளைக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையைப் பெருக்க உலகமே கென்ய வனவிலங்கு சரணாலயத்தைத் தான் நம்பியுள்ளது. அங்குள்ள மூன்று காண்டாமிருகங்களும் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என சரணால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, செயற்கை முறையில் அவைகளை கருவுறச் செய்யும் முயற்சிகள் மூலமே அபூர்வ வெள்ளை காண்டாமிருக இனத்தைக் காப்பாற்ற முடியும்.
கமாண்டோ பாதுகாப்பு...
எனவே, வேட்டைக்காரர்களிடமிருந்து வெள்ளைக் காண்டாமிருகங்களைக் காப்பாற்ற சரணாலய அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, உலகத்தின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டம்...
பொதுவாக காண்டாமிருகங்களின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும். தற்போது கென்யாவில் உள்ள ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு தற்போது 43 வயது ஆகிறது. எனவே, மீதமுள்ள ஆண்டுகளில் அதன் மூலம் செயற்கைக்கருவூட்டல் முறையில் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications