காதலியை கொன்ற வழக்கு: பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு
பிரிட்டோரியா: தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் இவருக்கு சிறை தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது.
பாரா ஒலிம்பிக் சாம்பியனான மாற்றுத் திறனாளி பிஸ்டோரியஸின் வீட்டு குளியலறையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திருடன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும், வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றும் விசாரணையின்போது பிஸ்டோரியஸ் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் வாக்குவாதம் நடந்துள்ளதாக வாதிட்டார்.
பிரிட்டோரியா உயர் நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி தொகோஸ்லி மஸிகா, "குற்றம் சாட்டப்பட்டவர் (பிஸ்டோரியஸ்) திட்டமிட்டுக் கொலை செய்தது, சந்தேகத்துக்கு இடமின்றி போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், கொலை செய்யும் நோக்கமின்றி மரணம் விளைவித்தாரா என்பது குறித்து, அடுத்த விசாரணையில் தெரியவரும்' எனத் தெரிவித்து, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தில் இருந்த பிஸ்டோரியஸ் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதார். அவரது சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை ஆறுதல் படுத்தினர். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இறுக்கமான முகத்துடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
பிஸ்டோரியஸ் குற்றவாளி இல்லை என்று வெளியான தீர்ப்பு, தென் ஆப்பிரிக்க சட்ட வல்லுநர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தது திட்டமிட்ட கொலை குற்றவரம்பில் வராதது என்றாலும் ஒருவரை மரணம் அடைய செய்து உள்ளார் என்பதால் தண்டனை உண்டு என்று நீதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக பிஸ்டோரியசுக்கு அந்நாட்டு சட்டப்படி 15 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications