Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீரில் பாகிஸ்தான்.. பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 320 பேர் பலி.. மக்களை மீட்க திணறும் அரசு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

pakistan flood

குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த மகாணம் மலையையொட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெஷாவர் ஆகும்.

இந்த மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் உள்ளிட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லபட்டுள்ளன. 320 பேர் வரை பலியாகி உள்ளனர்.

வெள்ளம் இன்னும் குறையாததால் மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். 9 மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2000க்கும் அதிகமானவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி கைபர் பக்துன்வா மீட்பு பிரிவின் செய்தி தொடரபாளர் பிலால் அகமது ஃபைசி கூறுகையில், ‛‛கனமழை, பல பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு படையினர் நடந்தே செல்லும் ிலை உள்ளது. உயிருடன் இருக்கும் மக்களை முதலில் பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்'' என்றார்.

மேலும் பாகிஸ்தானின் சில இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வ மையம் கணித்துள்ளது. இதில் கைபர் பக்துன்க்வாவின் சில இடங்கள் உள்ளதால் மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உருவாக்கி உள்ளது. இதுதவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வடக்கு கில்கிட் பால்டிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் மக்கள் இறந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+