அணை கட்டப் போன அப்பாவி தொழிலாளர் 20 பேர் சுட்டுக்கொலை... பாகிஸ்தானில்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 20 அப்பாவித் தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள கிராமம் ஒன்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் பழங்குடியினத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் சிலர் முகாமிட்டிருந்தனர். அணை கட்டும் பணிக்காக இவர்கள் அங்கு முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Pakistan dam builders shot dead in Balochistan

இந்நிலையில், நேற்று அந்தக் கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் தொழிலாளர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மூன்று தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை, பலுசிஸ்தான் மாகாண முதல்வர் அப்துல் மாலிக் பலுச் நேரில் பார்வையிட்டார்.

பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் மீது, பலுசிஸ்தான் பழங்குடியின ஆதரவு பயங்கரவாதிகள், நீண்ட காலமாகவே விரோத மனப்பான்மை கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நிகழ்ந்தப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+