இந்தியாவுக்காகவே அணு ஆயுதங்களை தயாரித்துள்ளோம்.. பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி மிரட்டல்
இந்தியாவுக்காகவே குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: இந்தியாவுக்காகவே குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி
தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாஸி ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் குறித்து அவர் விளக்கினார். தாங்கள் எதற்காக அணுஆயுதங்களை தயாரித்து வருகிறோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவே
பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடிக் கொடுக்கவே குறைந்த தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக கூறினார். மேலும் அணு ஆயுத சொத்துக்கள் மீது ஒரு மிக உறுதியான மற்றும் பாதுகாப்பான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறையை நாங்கள் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மிகவும் பாதுகாப்பான செயல்
இது மிகவும் பாதுகாப்பான செயல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணைம் மூலம் முழுமையான மேற்பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறை ஆகும் என்றும் அவர் கூறினார்.

20 ஆண்டுகளாக சாட்சி
கடந்த 20 ஆண்டுகளாக இது சாட்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானால் எந்த ஒரு தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் தயாரித்துள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும அவை பரிசோதித்து பார்க்கப்பட்டது என்றும் அப்பாஸி கூறினார்.

பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு
பாகிஸ்தான் ஒரு பொறுப்பான உலகளாவிய நாடு என்றும், கடந்த 15 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக தாங்கள் போராடி வருவதாகவும் அப்பாஸி தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அணு ஆயுதங்கள் உள்ளது
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதம் தான் பொதுவான எதிரி என்றும் அப்பாஸி கூறினார். தங்களிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும்
அது பற்றி சந்தேகம் இல்லை என்றும் அப்பாஸி தெரிவித்தார்.

எப்படி கையாள்வது எனத் தெரியும்
அணுசக்தி கழிவுகளை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். 60 களின் முற்பகுதியில் ஆசியாவில் அணுசக்தி திட்டத்தை கொண்ட முதல் நாடுகளில் ஒரு அணுசக்தி திட்டம் இருந்தது என்றும் அவர் கூறினார்.

யாரும் கவலைப்பட வேண்டாம்
தாங்கள் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் அதை நிர்வகித்திருந்தால், அதை நாங்கள் தொடர்ந்து நிர்வகிக்க முடியும் என்று நினைக்கிறேன், என்றும் அப்பாஸி கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு குறித்து உலக நாடுகள் கவலைப்பட வேண்டாம் என்றும் பிரதமர் அப்பாஸி தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications