ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக்.
Recommended Video
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பினார். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக ஷா மெகமூத் குரேஷி புகார் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம்களை வலுக்கட்டாயமான நடவடிக்கைகளால் சிறுபான்மையினராக்குகிறது இந்தியா. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரானது ருவாண்டாவைப் போல மாற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பயங்கரவாதத்தின் பெயரால் சர்வதேச நாடுகளை திசைதிருப்புகிறது இந்தியா. காஷ்மீர் நிலவரத்தை பன்னாட்டு அமைப்புகள் பார்வையிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச அமைப்புகள் ஆய்வு நடத்த நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமே சிறைகூடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா மெகமூத் குரேஷி பேசினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பான 115 அறிக்கையை குரேஷி தாக்கல் செய்தார். அதில் காஷ்மீர் குறித்து ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா முன்வைத்த விமர்சனங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications