பாக். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.. 90 நாட்களில் தேர்தல்.. இடைக்கால பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்
இஸ்லாமாபாத்; பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்திருந்தார். பாகிஸ்தானில் புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் இம்ரான் கான் பரிந்துரை செய்திருந்தார்.
அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இம்ரான் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்து இருக்கிறார்.

தீர்மானம்
இந்த தீர்மானம் சட்டத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்ட விதி 5க்கு எதிரானது இது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அதை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்து இருக்கிறார். இதனால் அந்த தீர்மானம் மீது இப்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது. இதனால் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்து நீடிப்பார்.

நாடாளுமன்ற அவை
பாகிஸ்தான் நாடாளுமன்ற அவை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு புதிதாக தீர்மானம் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் அதற்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்துள்ளார். அதோடு புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் மக்களே புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் முடிவு
தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும். இதனால் தேர்தலை புதிதாக நடத்துங்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று துணை சபாநாயகர் எடுத்த முடிவை வரவேற்கிறேன். அவரின் முடிவிற்கு என்னுடைய ஆதரவை தருகிறேன். தங்களை யார் ஆள வேண்டும் என்பது மக்களின் முடிவுதான். என்னுடைய ஆட்சியை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

ஏற்பு
பாகிஸ்தானை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயன்றதை நாங்கள் முறியடித்து இருக்கிறோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து உள்ளன. பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்












Click it and Unblock the Notifications