"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ்
இஸ்லாமாபாத் : நாங்கள் இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியிழந்த நிலையில், எதிர்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் நிலவிய அரசியல் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை தொடங்கியது.

ஷெபாஸ் ஷெரீப் கடிதம்
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் மூலம் இந்தியாவுடன் அமைதியான சகவாழ்வை விரும்புவதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீர் விஷயத்திலும் அவரது நிலைப்பாடு அப்படித்தான் எனவும், குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

பிரதமர் மோடிக்கு நன்றி
தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஷெரீப், இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் கூறினார். "பயங்கரவாதமில்லாத மண்டலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது, இதன்மூலம் நமது வளர்ச்சியில் கவனம் செலுத்தவும், நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை உறுதி செய்யவும் முடியும்" என்று முன்னதாக பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டரில் நன்றி
அதற்கு பதிலளித்த ஷெபாஸ் ஷெரீப், "வாழ்த்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது அவசியம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தியாகம் அனைவரும் அறிந்ததே. - சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். " என கூறியிருந்தார்.

அமைதி சாத்தியமில்லை
பதவியேற்ற பிறகு தேசிய சட்டமன்றத்தில் தனது முதல் உரையில் ஷெரீப், "நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை" என்று கூறினார். பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு சாதகமாகப் பேசி வரும் நிலையில், ஷெபாஸ் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications