பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்.. வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலோசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரன குவெட்டா அந்த நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாகும். குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும்.

இந்த நிலையில், இன்று காலை குவெட்டா ரயில் நிலையத்தில் இருந்து பெஷாவர் நகருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்தின் புக்கிங் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெடி குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலோச் விடுதலை ராணுவம் (BLA) என்ற இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற பலோசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
தற்போது ரயில் நிலையத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதற்கு பலோசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ரஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள புக்தி, உடனடியாக உரிய விசாரணைக்க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் இந்த தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications