பாகிஸ்தானில் பிரபல கவாலி பாடகர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை !
கராச்சி: பாகிஸ்தானில் பிரபல கவாலி இசை பாடகர் அம்ஜத் சாப்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சப்ரி சகோதர்கள் குழுமத்தை சேர்ந்த பிரபல கவாலி பாடகரான அம்ஜத் சப்ரி (வயது 45). இன்று பிற்பகல் கராச்சியில் உள்ள லியாகுவாதாபாத் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அம்ஜத் சப்ரியின் கார் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் அம்ஜத் சப்ரி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ஜத் சப்ரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சப்ரி சகோதரர்கள் குழுமம் குலாம் பரித் சப்ரி மற்றும் அவரது இளைய சகோதர் ஹாஜி மக்பூல் அகமது சப்ரி ஆகியோரால் துவங்கப்பட்டது. குலாம் சப்ரியின் மகன் அம்ஜத் சப்ரி ஆவார்.












Click it and Unblock the Notifications