2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டிய ஜமாத் உத் தாவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் 3 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்த தண்டனையானது மும்பை தாக்குதலுக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. உலக நிதி கண்காணிப்பு பணிக்குழுவின் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்த தவறியதற்காக பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதை தடுக்க வரும் செப்டம்பர் மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த காலக்கெடுக்குள் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இவர்களுக்கு சிறைத் தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கியது. பயங்கரவாத நிதியளித்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், பயங்கரவாத நிதியுதவிகளைக் கண்காணிக்கவும் நிறுத்தவும் உதவும் சட்டங்களை இயற்றவும் பாகிஸ்தானுக்கு கண்காணிப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கர்கள் உள்பட பல்வேறு நாட்டினர் 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு அல்லது வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.
இதையடுத்து ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்த மாலிக் ஜாஃபர் இக்பால், அப்துல் சலாம், ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோருக்கு மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாலிக் மற்றும் அப்துல் சலாமுக்கு 4 வழக்குகளின் கீழ் தலா 16.5 ஆண்டுகளும், ஹஃபீஸுக்கு ஒரு வழக்கின் கீழ் ஒன்றரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் கூட்டாளிகளான மேற்கண்ட 3 பேருக்கும் மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் மூவரும் மேலும் 5 ஆண்டுகள் தண்டனையை ஏக போகத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications