இந்தியா கிள்ளிடுச்சி அண்ணே.. தேம்பியபடி சீனாவிடம் ஓடிய பாகிஸ்தான்
பீஜிங்: தீவிரவாதிகள் மீது எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், சீனாவுக்கு, தனது தூதர்களை அனுப்பி வைத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.
நவாஸ் ஷெரிப்பின் சிறப்பு தூதர்களான மக்தும் குஷ்ரோ பக்த்யார் மற்றும் ஆலம் தாத் லாலேகா ஆகியோர் சீன தலைநகர் பீஜிங்கிற்கு விரைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை சீன அரசிடம் எடுத்துச் சொல்வது இவர்கள் வேலை. சீன வெளியுறவு துணை அமைச்சர் லியோ ஜென்மினை இவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வெளியுறவு கமிட்டி துணை தலைவர் சாய் வூ-வையும் இவர்கள் சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளன். கார்கில் போர் நடைபெற்ர காலகட்டத்திலும் இவ்வாறு பாகிஸ்தான் சீனாவிடம் போய் முறையிட்டது நினைவிருக்கலாம்.
சர்வதேச நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை புறம் தள்ளிவரும் நிலையில், சீனா மட்டுமே அந்த நாட்டுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications