பாகிஸ்தானில் மாகாண அமைச்சரின் மகன் மாயம்- தீவிரவாதிகளால் கடத்தல்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைச்சர் ஒருவரின் மகனை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலுசிஸ்தான் மாகாணம், தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாகாணமாக கருதப்படுகிறது. அங்கு, தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நீடித்து வருகிறது.

Pakistan , son of a provincial minister has been missing

அங்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகிப்பவர் சர்தார் முஸ்தபாகான் தரீன். கடந்த வெள்ளிகிழமை அவரது மகன் அசாத் கான் தரின், பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பியபோது காணவில்லையாம். தற்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கடத்தியவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாண முதல்மைச்சர் நவாஸ் சனவுல்லா ஜெஹ்ரி, அமைச்சரின் மகன் அசாத் கான் தரினை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+