சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பாகிஸ்தான்.. இதனால் என்ன ஆபத்து? முழு விவரம் இதோ
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971 போருக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையாக உருவான 1972 சிம்லா ஒப்பந்தத்தை (Shimla agreement) பாகிஸ்தான் நிறுத்திவைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும், கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control - LoC) நிறுவுவதற்கும் வழிவகுத்தது. இந்தியா கைப்பற்றிய பகுதிகளைத் திருப்பி அளித்தாலும், சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைத் தன்வசம் வைத்துக்கொண்டது. வங்கதேசத்தை பாகிஸ்தான் அங்கீகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய அமைதி ஒப்பந்தமான 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமையான இன்று அறிவித்தது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்திய-பாகிஸ்தான் உறவில் ஒரு மைல் கல் திருப்புமுனையாகக் கருதப்பட்டது. அது தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?
1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சிம்லா ஒப்பந்தம், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த ஜுல்பிகார் அலி பூட்டோ இடையே கையெழுத்தானது. கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் போரில் இந்தியா தலையிட்டதால் இந்தப் போர் ஏற்பட்டது. ஆனால், கிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலை தருவதில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியா வெற்றி கண்டது. இதன் விளைவாக வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. இந்தப் போரில் இந்தியாவின் தீரம் பாகிஸ்தானால் தலை வணங்கப்பட்டது.
சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்ப்பது: இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே வேறுபாடுகளைத் தீர்க்க ஒப்புக்கொண்டன. காஷ்மீர் பிரச்சினையைப் பொருத்தவரை, சிம்லா ஒப்பந்தத்தின்படி இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.
- கட்டுப்பாட்டுக் கோடு (LoC): 1971 போர் முடிவில் இருந்த போர் நிறுத்தக் கோடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடாக (LoC) அங்கீகரிக்கப்பட்டது. இந்த எல்லையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என ஒப்பந்தம் கூறியது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளதை பார்த்தால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சண்டைக்கு வர அது ரெடியாக இருப்பதாக தெரிகிரது.
- நிலம் திரும்ப அளிப்பு: இந்தியா கைப்பற்றிய 13,000 சதுர கி.மீ-க்கு அதிகமான நிலப்பகுதிகளை பாகிஸ்தானுக்குத் திரும்ப அளித்தது. எனினும், சர்பாத் பள்ளத்தாக்கில் உள்ள டர்டுக், தோதாங், தியாக்சி, சாலுங்கா போன்ற சுமார் 883 சதுர கி.மீ பரப்பளவிலான சில முக்கியப் பகுதிகளை இந்தியா தன்வசம் வைத்துக்கொண்டது.
- வங்கதேசத்தை அங்கீகரித்தல்: இந்த ஒப்பந்தம், வங்கதேசத்தை பாகிஸ்தான் தூதரக ரீதியாக அங்கீகரிக்கவும் வழிவகுத்தது. எனவே இனி வங்கதேசத்தை பாகிஸ்தான் அங்கீகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இப்போது வங்கதேசத்தின் நண்பன் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒப்பந்தத்தின் தாக்கமும் வரம்புகளும்
சிம்லா ஒப்பந்தம் பெரிய இலக்குகளைக் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைவதைத் தடுக்கவில்லை. உதாரணமாக, 1999 கார்கில் போர், 1980களில் சியாச்சின் பனிப்பாறை மோதல் மற்றும் காஷ்மீர் மீதான தொடர்ச்சியான சர்ச்சைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
1984ஆம் ஆண்டு இந்தியா, சியாச்சின் பனிப்பாறைப் பகுதியைக் கைப்பற்றிய "ஆபரேஷன் மேகதூத்" நடவடிக்கையை, பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதியது. ஏனெனில் ஒப்பந்தத்தில் எல்லை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பது அதன் வாதம். சியாச்சின் மோதல் இன்றும் தொடர்கிறது.

சிம்லா ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதன் தாக்கம் என்ன?
பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளதன் தாக்கம் குறித்துப் பரவலான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு அடிப்படையாகக் கருதப்பட்டது. இது நிறுத்திவைக்கப்படுவதால் ஏற்படும் முக்கிய தாக்கங்களாகக் கருதப்படுபவை:
- பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு: சிம்லா ஒப்பந்தம் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தியது. இப்போது ஒப்பந்தம் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மேலும் குறையலாம். மூன்றாம் தரப்புத் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கலாம்.
- கட்டுப்பாட்டுக் கோடு நிலை: ஒப்பந்தம் கட்டுப்பாட்டுக் கோட்டை அங்கீகரித்து, அதை ஒருதலைப்பட்சமாக மாற்றக்கூடாது எனக் கூறியது. ஒப்பந்தம் இல்லாத நிலையில், கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான பதற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
- பிரச்சினைகளின் தீர்வு: காஷ்மீர் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தைகளாக இருந்தது. இப்போது அந்த அடிப்படை நீக்கப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு மேலும் சிக்கலடையலாம்.
- உறவுகளில் மேலும் விரிசல்: ஏற்கனவே பதற்றத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் இந்த நடவடிக்கை மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும். அமைதியான முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்டுள்ளதால், எதிர்கால மோதல்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்ற கவலைகள் உள்ளன.
மொத்தத்தில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இந்திய-பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா ஒப்பந்தம் வழங்கும் அடிப்படையிலான அமைதி வழிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைக் கையாள்வது மேலும் சவாலாக மாறக்கூடும் என்பதே இதன் முக்கிய தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications