இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் வழக்கு: 6 பாக். தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது லாகூரில் இலங்கை அணி வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கை வீர்ர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் உட்பட 8 பேர் பலியாகினர்.

இது தொடர்பான வழக்கு கோட் லக்பத் சிறைச்சாலையில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 6 தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார். வரும் 30-ந் தேதி முதல் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஜூபைர், அப்துல் வஹாப், அட்னன் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஒபைதுல்லா, ஜாவேத், இப்ராஹிம் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் மொஹ்சின் ரஷீத், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications