டிவி லைவ் நிகழ்ச்சியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய பாக். தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாகிஸ்தான் செனட் உறுப்பினரும், ஜாமியத்துல் உலமா இஸ்லாம் பாசல் மத கட்சியின் நிர்வாகியுமான ஹபீஸ் ஹம்துல்லா பெண் மனித உரிமை ஆர்வலரை பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.
பாகிஸ்தான் செனட் உறுப்பினரும், ஜாமியத்துல் உலமா இஸ்லாம் பாசல் மத கட்சியின் நிர்வாகியுமான ஹபீஸ் ஹம்துல்லா, வழக்கறிஞர் மஸ்ரூர் மற்றும் மனிதர உரிமை ஆர்வலரான மார்வி சிர்மித் ஆகியோர் நியூஸ் ஒன் தொலைக்காட்சி சேனலின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பாகிஸ்தானில் நடந்து வரும் கவுரவக் கொலைகள் குறித்து விவாதித்தனர். லைவாக நடந்த நிகழ்ச்சியின்போது மார்வி கூறிய கருத்தால் ஆத்திரம் அடைந்த ஹபீஸ் அவரை பார்த்து உங்களின் மற்றும் உங்களின் தாயின் உடைகளை அவிழ்ப்பேன், பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.
உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் அதையே செய்யுங்கள் என்று மார்வி கூற ஹபீஸ் அவரை அடிக்க பாய்ந்துள்ளார். இதை பாரர்த்த மஸ்ரூர் ஹபீஸை தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கிடையே நியூஸ் ஒன் சேனலின் பாதுகாவலர்கள் வந்து ஹபீஸை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மார்வி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். ஹபீஸ் நோன்பு வைத்துக் கொண்டு இத்தனையும் செய்துள்ளார் என மார்வி தெரிவித்துள்ளார். மார்வியின் போஸ்ட்டை பார்த்த பலர் ஹபீஸை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications