ரூ.6.7 கோடிக்கான குளோபல் டீச்சர் பரிசை வென்ற பாலஸ்தீன பெண்: எதற்கு தெரியுமா?
துபாய்: பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹனான் அல் ஹ்ரூப் என்ற ஆசிரியை தனது மாணவர்களுக்கு அஹிம்சை பற்றி பாடம் கற்பித்துக் கொடுத்ததற்காக சர்வதேச ஆசிரியர் பரிசை பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகை ரூ. 6.73 கோடி ஆகும்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த ஆசிரியை ஹனான் அல் ஹ்ரூப் தனது மாணவ, மாணவியருக்கு அஹிம்சையை கற்றுக் கொடுத்து சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றுள்ளார்.

வர்கி பவுன்டேஷன் அளித்த இந்த பரிசை ஹனான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் நடந்த விழாவில் பெற்றுக் கொண்டார். அவர் இந்தியாவை சேர்ந்த ராபின் சவ்ராசியா உள்பட 9 பேரை தோற்கடித்து இந்த பரிசை வென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகை ரூ.6.73 கோடி ஆகும்.
ராபின் சவ்ராசியா மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுராவை சேர்ந்த சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனான் பாலஸ்தீனத்தில் உள்ள அல் பிரே புதியில் சமிஹா கலீல் உயர் நிலைப் பள்ளியை நடத்தி வருகிறார். பரிசை ஏற்றுக் கொண்ட ஹனான் கூறுகையில்,
நான் ஜெயித்துள்ளேன். பாலஸ்தீனம் ஜெயித்துள்ளது. இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 பேருக்கும் உலகை மாற்றும் சக்தி உள்ளது என்றார்.
கேரளாவில் பிறந்த தொழில் அதிபரும், கல்வியாளருமான சன்னி வர்கி என்பவர் தனது வர்கி பவுன்டேஷன் மூலம் சர்வதேச ஆசிரியர் பரிசை கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications