For Quick Alerts
For Daily Alerts
Just In
பாலஸ்தீனிய இளைஞர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொலை
இஸ்ரேல்: பாலஸ்தீனிய இளைஞர் ஒருவரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற சோதனையில் தவறுதலாக அந்த இளைஞரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று பாலஸ்தீனிய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் யுசூப் அபு ஜாகீர் 18 வயதானவர்.
மேற்குக் கரை பகுதியில் 3 இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்திருந்தனர். இதையடுத்து அந்த வீட்டில் இஸ்ரேலிய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு ஹமாஸ் இயக்கத்தவரையும் சுட்டுக் கொன்றனர். சம்பவத்தின்போது 3 இஸ்ரேலிய இளைஞர்களும் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில்தான் பாலஸ்தீன இளைஞரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
Comments
English summary
Israeli troops shot dead a young Palestinian early Tuesday during a raid into the Jenin refugee camp in the northern West Bank, Palestinian security and medical officials said.
Story first published: Tuesday, July 1, 2014, 10:25 [IST]