கராச்சியில் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்திய 3 பேர்: அச்சத்தில் இந்துக்கள்
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கோவில் ஒன்றுக்குள் புகுந்த 3 பேர் சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் 60 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி சல்வார் கமீஸ் அணிந்து தாடி வைத்த 3 பேர் துப்பாக்கிகளுடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர்.

கோவிலுக்குள் இருந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வெளியேற்றிவிட்டு சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்தாலும் தற்போது தான் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்தபோது கோவிலுக்குள் மஹாராஜ் ஹிரா லால் என்பவரும் அவரது குடும்பத்தாரும், கோவில் பாதுகாவலர்களும் தான் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஹிரா லால் கூறுகையில்,
சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட பிறகு பூஜைக்காக மக்கள் கோவிலுக்கு வர அஞ்சுகிறார்கள். சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர்களை நாங்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. இந்த சம்பவத்தால் வருத்தம் அடைந்துள்ளோம். இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த கோவிலை கட்டியவர் எனது தாத்தா. இந்த கோவிலில் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்றார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications